கிரிக்கெட்

தோனி தலையீட்டை நிறுத்தி கொள்ள வேண்டும்: ஜடேஜா ஆதங்க பேட்டி!

Published

on

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய தோனி தனது தலையீட்டை நிறுத்திக்கொள்ள வேண்டுமென ஜடேஜா கூறியுள்ளார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஜடேஜா அல்ல என்பதும் முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த இரண்டு போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்த நிலையில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன .குறிப்பாக கேப்டன் பதவியில் விலகி இருந்தாலும் ஜடேஜாவை தோனி முடிவு சொந்தமாக முடிவெடுக்க விடுவதில்லை என்றும் அவர் பல அறிவுரைகளைக் கூறி வருகிறார் என்றும், தோனி சொல்வதைத்தான் ஜடேஜா செய்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகி விட்டதால் தலையீட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தனது விக்கெட் கீப்பிங் பணியை மட்டும் பார்க்க வேண்டும் என்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா கூறியுள்ளார்

கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி மீண்டும் முடிவுகளை எடுப்பது தவறாக உள்ளது என்றும் இது சரியாக இருக்காது என்றும், புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜாவுக்கு நம்பிக்கையை குறைக்கும் என்றும் அஜய் ஜடேஜா கூறியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version