சினிமா செய்திகள்
ஐஸ்வர்யா ராஜேஷூக்கு அவசரமாக தேவைப்பட்ட ரெம்டெசிவிர் மருந்து: உடனடியாக குவிந்த உதவிகள்!
![aiswarya rajesh2 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/05/aiswarya-rajesh2.jpg)
பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ரெம்டெசிவிர் மருந்து அவசரமாக தேவைப்பட்டதை அடுத்து ரசிகர்கள் உடனடியாக உதவி செய்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ். நேற்று தனது டுவிட்டர் தளத்தில் இருந்து ஒன்றை பதிவு செய்து இருந்தார். அதில் தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் பெற்றோர்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர்களுக்கு உடனடியாக ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுவதாகவும் அவர்கள் திருச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் திருச்சியில் உள்ள நண்பர்கள் அவருக்கு உதவி ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க உதவி செய்ய வேண்டும் என்றும் கூறி தனது நண்பரின் செல்போன் எண்ணையும் பதிவு செய்திருந்தார்
இதனை அடுத்து திருச்சியை சேர்ந்த ரசிகர்கள் ரெம்டெசிவிர் மருந்து ஐஸ்வர்யா ராஜேஷின் நண்பருக்கு கிடைக்க உடனடியாக உதவி செய்தனர். இதனை அடுத்து சில நிமிடங்களில் அவர் தனது டுவிட்டர் தளத்தில் மீண்டும் தனது நண்பரின் பெற்றோருக்கு தேவையான ரெம்டெசிவிர் மருந்து கிடைத்து விட்டதாகவும் உடனடியாக உதவி செய்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவு செய்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷின் இந்த ட்வீட்டுகள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன
Thank u thank u thank u so much for d quick response … v got d medicine ????????????
— aishwarya rajesh (@aishu_dil) May 10, 2021