சினிமா செய்திகள்

ஓடிடியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படம்!

Published

on

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள ’திட்டம் இரண்டு’ என்ற திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் சென்னையிலேயே நடத்தி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதற்காக படக்குழுவினர் காத்திருந்தனர். ஆனால் திரையரங்குகளில் எப்போது திறக்கப்படும் என்ற தெரியாத நிலை உள்ளதால் ’திட்டம் இரண்டு’ படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்

இதற்கான பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் விரைவில் ரிலீஸ் தேதி மற்றும் வெளியாகும் ஓடிடி நிறுவனம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தினேஷ் கண்ணன் வினோத் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ள இந்தப் படம் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த படம் என்பதால் ’கனா’ படம் ஒன்றை இந்த படமும் ஐஸ்வர்யா ராஜேஷ் கே வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பூமிகா, ரிபப்ளிக், டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், துருவநட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version