சினிமா செய்திகள்
ஓடிடியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படம்!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகிய ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ’க/பெ ரணசிங்கம்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள ’திட்டம் இரண்டு’ என்ற திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் சென்னையிலேயே நடத்தி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்து திரையரங்குகளில் ரிலீஸ் செய்வதற்காக படக்குழுவினர் காத்திருந்தனர். ஆனால் திரையரங்குகளில் எப்போது திறக்கப்படும் என்ற தெரியாத நிலை உள்ளதால் ’திட்டம் இரண்டு’ படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்
மேலும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது பூமிகா, ரிபப்ளிக், டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன் ரீமேக், துருவநட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.