சினிமா செய்திகள்

ரஜினியின் ‘தலைவர் 169’ படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு இத்தனை கோடி சம்பளமா?

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ‘தலைவர் 169’ படத்தில் ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தில் அவருக்கு வழங்கப்பட்ட உள்ள சம்பளம் குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 100 கோடி சம்பளம் வாங்கி வருகிறார் என்பதும் இந்த படத்தில் நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் 30 கோடி வரை சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது.

தமிழ் நடிகைகளில் அதிகமாக சம்பளம் வாங்கும் நயன்தாராவே 10 கோடிக்கு மேல் வாங்குவது இல்லை என்றும் ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பெரிய படங்களில் நடிக்காத ஐஸ்வர்யா ராய் 30 கோடி வரை கேட்டிருப்பது தயாரிப்பு நிறுவனத்தை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ஐஸ்வர்யாராய் இந்த படத்தில் இணைந்தால் அந்த படம் உலக அளவில் கவனிக்கப்படும் என்பதால் அவரிடம் பேரம் பேசி வருவதாகவும் எவ்வளவு சம்பளம் இருந்தாலும் அவர்தான் இந்த படத்தின் நாயகி என்பதில் படக்குழுவினர் திட்டவட்டமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Trending

Exit mobile version