சினிமா செய்திகள்

தனுஷ் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறாரா ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?

Published

on

தனுஷ் நடித்த சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்தை இயக்க திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு தனுஷ் நடித்து இயக்கிய திரைப்படம் பா.பாண்டி. இந்த படத்தில் ராஜ்கிரண் மற்றும் ரேவதியின் காதல் மிகவும் அழகாக சொல்லப்பட்டு இருக்கும். இந்த படத்தின் கதை உண்மையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எழுதியதாகவும் ஆனால் தனுஷ் தன்னுடைய பெயரை போட்டுக் கொண்டதாகவும் அப்போது சில சர்ச்சைகள் எழுந்தன.

இந்த நிலையில் பா.பாண்டி படத்தின் இரண்டாம் பாகத்தை ஐஸ்வர்யா இயக்க திட்டமிட்டு உள்ளதாகவும் விரைவில் இந்த படம் குறித்த பணிகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

ராஜ்கிரன் மற்றும் ரேவதி கேரக்டர்களில் அவர்களே நடிப்பார்கள் என்றும் மேலும் ஒரு முக்கிய ராகவா லாரன்ஸ் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

தனுஷ் இயக்கிய படத்தின் இரண்டாம் பாகத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கவிருக்கும் தகவல் உறுதி செய்யப்பட்டால் அதற்கு தனுஷ் எதிர்ப்பு தெரிவிப்பாரா? அல்லது ஆதரவு தெரிவிப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version