சினிமா செய்திகள்
லைகா தயாரிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் படம்: அதிரடி அறிவிப்பு!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் ஏற்கனவே தனுஷ் நடித்த ’3’ என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பதும் அதேபோல் கௌதம் கார்த்திக் நடித்த ‘வை ராஜா வை’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்த படம் குறித்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ளார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டது என்பதும் விரைவில் இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் கதையை சஞ்சீவி என்பவர் எழுதி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
3 மற்றும் வை ராஜா வை ஆகிய இரண்டு வெற்றி படங்களை அடுத்து ஐஸ்வர்யா தனுஷுக்கு ஹாட்ரிக் வெற்றி படமாக இந்த படம் அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Lyca Production's Producers #Subaskaran & #MahaveerJain sign @ash_r_dhanush to Direct a bilingual thriller, Written by #Sanjeev. This family entertainer will be Presented by Lyca Productions.#aishwarya_r_dhanush#aashishsingh pic.twitter.com/NbZFR7mb8N
— Lyca Productions (@LycaProductions) October 2, 2021