சினிமா செய்திகள்

தனுஷ் விவாகரத்து அறிவிப்பு: ஐஸ்வர்யா, செளந்தர்யா ரியாக்சன்

Published

on

பிரபல நடிகர் தனுஷ் நேற்று திடீரென தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷ், ஐஸ்வர்யாவுக்கு திருமணம் நடைபெற்றது என்பதும் இது ஒரு காதல் திருமணம் என்றும் இந்த திருமணத்தில் ரஜினி குடும்பத்தினர்களுக்கு கொஞ்சமும் இஷ்டம் இல்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாக தனுஷ் திடீரென அறிவித்துள்ளது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் இடையே எந்த ஒரு பிரச்சனை இருப்பதாக சிறு செய்தி கூட வெளிவராத நிலையில் திடீரென இருவரும் பிரியும் அளவுக்கு என்ன பிரச்சனை என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இருப்பினும் இது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை விவகாரம் என்பதால் இதில் மூன்றாவது நபர் தலையிட அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனுஷ் விவாகரத்து அறிவிப்புக்குப் பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஸ்வர்யா தனுஷ், ‘உங்கள் புரிதல் மற்றும் அன்பு மட்டும் இருந்தால் போதும், அதுதான் இப்போது முக்கியம், வேறு எதுவும் தேவையில்லை என்று பதிவு செய்துள்ளார்.

அதேபோல் சௌந்தர்யா ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் ஐஸ்வர்யா, செளந்தர்யா சிறு குழந்தைகளாக இருக்கும்போது ரஜினி தங்களை தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதன்மூலம் இனி எங்களுக்கு ஒரே பாதுகாப்பு தங்கள் தந்தை ரஜினிதான் என்பதை அவர் மறைமுகமாக குறிப்பதாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது.

தனுசு விவாகரத்து அறிவிப்பை அடுத்து ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா தங்களது சமூக வலைதளத்தில் செய்த இந்த பதிவுகள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

seithichurul

Trending

Exit mobile version