சினிமா
ஐஸ்வர்யா “ஞாபகம் வருதா“ என்ற டாஸ்க்கில் முதல் இடம் பிடித்தார்.
பிக் பாஸ் வீட்டில் “ஞாபகம் வருதா“ என்ற டாஸ்க்கில் அதிக மதிப்பெண் பெற்று முதல் இடத்தைப் பெற்றார் ஐஸ்வர்யா. இந்த டாஸ்க்கில் ஐஸ்வர்யா ஹீரோ ஆனார்.
இந்த டாஸ்க்கில் வரிசையாகச் சொன்ன வண்ணங்களை ஞாபகம் வைத்து சரியாகவும், இடையிடையே பாடலுக்கு நடனமும் ஆடியும் டாஸ்க்கில் முழு மதிப்பெண்களை 230 பெற்றுள்ளார்.
மொத்தத்தில் ஐஸ்வர்யா நியாயமாக விளையாடி வெற்றி பெற்ற ஒரே டாஸ்க் இதுதான். ஐஸ்வர்யாவுக்குத் தமிழ் முழுமையாகத் தெரியாது இவரே முழு மதிப்பெண் பெற்றார். ஆனால் தமிழ்ப்பெண்களான ரித்விகா, விஜயலட்சுமி, ஜனனி இந்த டாஸ்க்கில் குறைந்த மதிப்பெண்களையே பெற்றனர்.
யாஷிகா, ஐஸ்வர்யாவை பார்த்துக் காப்பியடித்து இரண்டாம் இடம் பெற்றார். இந்த இரண்டு டாஸ்க்குகளின் முடிவில் யாஷிகா, ஐஸ்வர்யா 230 புள்ளிகள் பெற்று சம நிலையில் உள்ளனர். விஜி 120 புள்ளிகளும், ஜனனி 90 புள்ளிகளும், பாலாஜிவும், ரித்விகாவும் -10 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.