சினிமா செய்திகள்

ஐஸ்வர்யா ராஜேஷின் கனா பலித்தது!

Published

on

 

சென்னை பொண்ணு ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்து அடுத்து பல படங்களில் கமீட் ஆகி தனது சிறப்பான நடிப்பை அசால்ட்டாக வெளிப்படுத்தி வருகிறார்.

அண்மையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான கனா படத்தில் கெளசல்யா முருகேசனாகவும் அதற்கு முன் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தின் பத்மாவாகவும் நடிப்பில் நம்பர் ஒன் நாயகி என்ற அந்தஸ்த்தை பிடித்து விட்டார்.

தனுஷுடன் நடிக்க வேண்டும் என்ற ஐஸ்வர்யா ராஜேஷின் நீண்ட நாள் கனவு வடசென்னை படத்தில் நிறைவேறி விட்ட நிலையில், சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஐஸ்வர்யாவின் அடுத்த கனாவும் நிறைவேறப் போகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாண்டியராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாம்.

இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் ஹீரோ படம் பூஜையுடன் துவங்கி உள்ள நிலையில், அடுத்த அடுத்த படங்களின் அப்டேட் என கோலிவுட்டையே கலக்கி வருகிறார் சிவகார்த்திகேயன்.

கனா படத்தில் சிவகார்த்திகேயன் – ஐஸ்வர்யா ராஜேஷ் வரும் சில சீன்களே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த காம்பினேஷன் படத்திற்கு பக்க பலமாக இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version