சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வனில் ஐஷ்வர்யா ராய்க்கு டபுள் ரோல்.. வில்லியும் அவரே தான்!

Published

on

பொன்னியின் செல்வன் நாவலை படைத்தவர்களுக்கு ஊமை ராணி மந்தாகினி மற்றும் பழுவூர் இளவரசி நந்தினி தேவி கதாபாத்திரங்கள் மிகவும் பரீட்சையமாகியிருக்கும் அந்த கேரக்டரில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில், அடுத்ததாக பொன்னியின் செல்வன் படம் உருவாகவுள்ளது. ஆனால், இதுவரை அதனை மணிரத்னம் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவலாக வெளியிடவில்லை. ஆனாலும், பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் கதையின் வில்லி மற்றும் தியாகச் சிகரமான இரு கதாபாத்திரங்களிலும் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுந்தரசோழர் கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சனும், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ் மற்றும் கற்பனை கதாபாத்திரமான வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தி நடிக்க உள்ளதாக கோலிவுட்டின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளிவரும், படம் சீக்கிரமாக முடிக்கப்பட்டு எப்போது திரைக்கு வரும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version