சினிமா செய்திகள்
குந்தவையாக நடிக்கிறாரா ஐஸ்வர்யா ராய்?
![Aishwarya-Rai-in-Jodhaa-Akbar - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/01/Aishwarya-Rai-in-Jodhaa-Akbar.jpg)
மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டாரர் படமாக வெளியான செக்கச்சிவந்த வானம் கடந்த ஆண்டு நல்ல வசூலை ஈட்டியது.
தற்போது, தனது கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் சிம்பு, விக்ரம், ஜெயம் ரவி முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், கூடுதல் அப்டேட்டாக தற்போது, அமிதாப் பச்சன் மற்றும் அவரது மருமகள் ஐஸ்வர்யா ராயும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் நடிக்கிறார் என்றால் முக்கியமான கதாபாத்திரத்தில் தான் நடிப்பார். பொன்னியின் செல்வன் நாவலில் குந்தவை பிராட்டிக்குத் தான் மிகவும் முக்கியமான கதாபாத்திரம். அதனால், ஐஸ்வர்யா ராயை அந்த வேடத்திற்கு தான் மணிரத்னம் புக் செய்துள்ளார் என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது.
எல்லாம் ஓகே.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை விரைவில் மெட்ராஸ் டாக்கீஸ் வெளியிட்டால் தான் ரசிகர்களுக்கு உண்மையான மகிழ்ச்சி மற்றும் உறுதி ஏற்படும்.