தொழில்நுட்பம்
ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. இப்போது கூடுதல் டேட்டா..
ஏர்டெலில் தினசரி 1 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்த ஒரு பிளானில் தற்போது 1.5 ஜிபி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இனி கூடுதல் டேட்டாவைப் பெறலாம்.
ஏர்டெல் நிறுவனம் தினமும் 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், அன்லிமிடேட் வாய்ஸ்கால் ஆகியவற்றை 199 ரூபாய் பிளானில் வழங்கி வந்தது. இந்த நிலையில், புத்தாண்டை முன்னிட்டும், மற்ற நெட்வொர்க் நிறுவனங்களின் போட்டிகளை சமாளிக்கும் வகையிலும் டேட்டா அளவை உயர்த்தியுள்ளது.
அதன்படி, இனி 199 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 1.5ஜிபி டேட்டாவைப் பெறலாம். இதர வசதிகள் அப்படியே பொருந்தும். இவை விங்க் மியூசிக், ஹெலோ டியூன்ஸ், ஏர்டெல் எக்ஸ்டிரிம் செயலிக்கான சந்தா ஆகியவற்றுக்கான அணுகலும் வழங்கப்படுகிறத. ஏர்டெல் எக்ஸ்டிரிமில் 350 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களைப் பார்க்க முடியும்.
ஏற்கெனவே 249 ரூபாய்க்கு இதே பலன்களுடன் கூடிய பிளான் உள்ள நிலையில், இந்த புதிய பிளானானது தற்போது ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா வட்டங்களில் மட்டுமே கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் தமிழகத்திற்கும் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.