இந்தியா

மீண்டும் உயரும் ஏர்டெல் கட்டணம்: அதிர்ச்சியில் பயனாளிகள்

Published

on

நாடு முழுவதும் ஏர்டெல் கட்டணம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாக ஏர்டெல் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வசம் தான் தற்போது ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பதும் கவர்ச்சியான சலுகைகள் மூலம் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதிரடியாக கட்டணங்களை உயர்த்தி அதிர்ச்சி அளித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜியோ, ஏர்டெல், வோடபோன் உள்பட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தின. இதனால் பயனாளிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மீண்டும் தொலைத்தொடர்பு சேவை கட்டணங்கள் உயர்த்தப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் இந்த கட்டணம் உயர்த்தப்படும் என்றும் ஒருவரிடம் இருந்து சராசரியாக 200 ரூபாய் வருவாய் கிடைத்து வரும் நிலையில் நடப்பாண்டில் அதனை 300 ரூபாயாக உயர்த்த போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இதனால் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்து உள்ள நிலையில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு மாற தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version