தமிழ்நாடு

அதிமுக அமைச்சருக்கு கொரோனா உறுதி! மருத்துவமனையில் அனுமதி!!

Published

on

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கிய கொரோனா பல பாதிப்புகளை ஏற்பாடுத்தியது. சாதாரண மக்களையில் தொடங்கி பெரும் அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்களையும் இந்த கொரோனா விட்டு வைக்கவில்லை.

இந்த நிலையில், தற்போது தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

அமைச்சர் காமராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருவாரூரில்  நடைபெற்ற பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டார். அப்போது கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக கே.பி.அன்பழகன், துரைக்கண்ணு, செல்லூர் ராஜூ, நிலோஃபர் கபில், தங்கமணி என பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 

seithichurul

Trending

Exit mobile version