தமிழ்நாடு

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடம்!

Published

on

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்ட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மதுசூதனனுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக இருப்பதாகவும் இருப்பினும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிக்கும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கவலைக்கிடம் என்ற தகவல் கிடைத்தவுடன் அதிமுக நிர்வாகிகள் மருத்துவமனைக்கு வருகை தந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கடந்த மாதம் 20 ஆம் தேதியில் இருந்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

ஏற்கனவே உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் அவர்களை சசிகலா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் நேரில் வந்து சந்தித்து உடல் நலம் விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version