தமிழ்நாடு

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

Published

on

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடலுக்கு சற்று முன்னர் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளார்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கடந்த சில நாட்களாக உடல் நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை காலமானார். அவருடைய மறைவிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் சசிகலாவும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சற்று முன்னர் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள மதுசூதனன் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவருடைய உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அவர் மதுசூதனன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே மதுசூதனன் மறைவுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த இரங்கல் அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

அதிமுக அவைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் அவர்களின் மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கும் துயரத்துக்கும் உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர், அம்மையார் ஜெயலலிதா ஆகியோரின் அன்பை பெற்று, அவர்களால் கட்சியில் முக்கிய பொறுப்பில் அமர்த்தபட்டவர். அதிமுக அவைத் தலைவராகப் பணியாற்றியவர் கட்சியின் வளர்ச்சிக்கு பட்டி தொட்டிகள் வரை பாடுபட்டவர். அப்படிப்பட்ட முன்னோடி தலைவர் இறந்திருப்பது பேரிழப்பாகும். மேலும் மதுசூதனன் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் தனது அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்

seithichurul

Trending

Exit mobile version