தமிழ்நாடு

அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அதிமுக தலைமை அதிரடி உத்தரவு!

Published

on

இன்று மாலை அனைத்து மாவட்ட செயலாளர்களும் சென்னையில் இருக்க வேண்டும் என அதிமுக தலைமை சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக இன்று விலகியதை அடுத்து அதிமுக கூட்டணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மாலை மாவட்ட செயலாளர்களுடன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இதனை அடுத்து இன்று மாலை சென்னையில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாகவும் இது குறித்து இருவரும் ஆலோசனை செய்வதற்காக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை என்று கூட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம் என பல வேலைகள் இருப்பதால் அதிமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் சுறுசுறுப்பாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version