தமிழ்நாடு

அதிமுக-பாஜக கூட்டணியில் இழுபறியா? அமித்ஷாவுக்கு கட்டுப்படாத ஓபிஎஸ்-ஈபிஎஸ்!

Published

on

அதிமுக கூட்டணியில் பாஜக தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடிப்பதாகவும் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

சமீபத்தில் சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 23 தொகுதிகள் பாமகவுக்கு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் பாஜகவுக்கு 30 தொகுதிகள் வரை வேண்டும் என்று பாஜக பிடிவாதமாக இருப்பதாக தெரிகிறது.

ஆனால் அதிமுக தரப்பிலிருந்து 20 தொகுதிகளில் மேல் தர முடியாது என்று சொல்லி விட்டதாகவும் கூறப்படுகிறது. அமித்ஷாவே நேரடியாக வந்து ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர்களிடம் பேசியும் அதிமுக தலைமை விட்டுக் கொடுக்கவில்லை என்றும் இருபதுக்கு மேல் தர முடியாது என்றும் பிடிவாதமாக சொல்லி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பாஜக மேலிடம் அதிருப்தியில் இருப்பதாகவும் இதனை அடுத்து அதிமுக-பாஜக கூட்டணியில் இழுபறி நிலை நீடிப்பதாகவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version