சினிமா செய்திகள்

எங்கள் குடும்பத்தின் அன்பு மிகுந்த உறுப்பினரை நாங்கள் இழந்து நிற்கிறோம்: ஏஜிஎஸ் நிறுவனம் அறிக்கை

Published

on

பிரபல இயக்குனர் கேவி ஆனந்த் அவர்கள் மறைவிற்கு இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ள பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் எங்கள் குடும்பத்தின் அன்புமிக்க உறுப்பினர் ஒருவரை நாங்கள் இழந்து விட்டோம் என்று தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: ஏஜிஎஸ்ஸ் குடும்பத்தின் அன்பு மிகுந்த உறுப்பினரை நாங்கள் இழந்து நிற்கிறோம். கேவி ஆனந்த் ஆச்சரியப்படத்தக்க ஒளிப்பதிவாளரும் மிகச்சிறந்த இயக்குனரும் ஆவார். முக்கியமான சமூக பிரச்சனைகள் குறித்து பேசிய திரைப்படங்களை அவர் எடுத்தார்.

அன்புள்ளம் கொண்ட மகிழ்ச்சி நிரம்பிய மனிதரான அவர் ஒட்டுமொத்த குழுவின் மீதும் அன்பு செலுத்தினார். அவரது இழப்பைத் தாங்கிக் கொள்ளும் வலிமையை அவரது குடும்பத்திற்கு தருமாறு நாங்கள் பிரார்த்திக்கிறோம். அவரது மறைவு எங்களுக்கு பேரிழப்பாகும்’. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கே வி ஆனந்த் இயக்கிய மாற்றான் அனேகன் ஆகிய திரைப்படங்களை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version