தமிழ்நாடு

தமிழக சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல்: முக்கிய அம்சங்கள்!

Published

on

தமிழக சட்டமன்றத்தில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

* பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு மொத்தமாக ரூ.33,007 கோடி ஒதுக்கீடு

* கடந்தாண்டு வேளாண்துறைக்கு ரூ.32,775.78 கோடி ஒதுக்கப்பட்டது

*அரசு மாணவியர் விடுதிகளில் காய்கறி, பழங்கள், மூலிகை தோட்டம்

* 200 விடுதிகளில் ₨20 லட்சம் மதிப்பீட்டில் திட்டம் – வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

* பயிர் காப்பீடு திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ.2,546 கோடி ஒதுக்கீடு

* உழவர் சந்தைகளில் மாலை நேரத்திலும் சிறுதானியம், பயிறு வகைகள் விற்பனை செய்ய நடவடிக்கை

* விவசாய பணிகளில் ட்ரோன்களின் பயன்பாட்டுக்கு ரூ.10 கோடியில் திட்டம்

* பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.4 கோடி ஒதுக்கீடு

* ரூ.175 கோடியில் புதிய நீர்வழிப்பாதை மேம்பாடு 2.0 திட்டம்

* தேனீ வளர்ப்பு திட்டத்துக்கு ரூ.10.25 கோடி ஒதுக்கீடு

* தென்னை, மா, கொய்யா, வாழை தோட்டங்களில் ஊடுபயிர்களை ஊக்குவிக்க ₨27.51 கோடி ஒதுக்கீடு

* 38 கிராமங்களில் மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் மையங்கள் அமைக்க ₨95 கோடி ஒதுக்கீடு

* வேளாண் சந்தை மற்றும் ஆராய்ச்சி மையங்கள் அமைக்க ₨16 கோடி நிதி ஒதுக்கீடு

* டெல்டா பகுதியில் பாசன கால்வாய்களை தூர்வார ₨5 கோடி ஒதுக்கீடு

* வேளாண் பண்ணை குட்டைகள் அமைக்க ₨3 கோடி ஒதுக்கீடு

* செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்பு செட்டுகள் அமைக்க ₨1.50 கோடி ஒதுக்கீடு

* ரூ. 65 கோடியில் 3 ஆயிரம் விவசாயிகளுக்கு சோலார் பம்புசெட்கள் வழங்கப்படும்

* சிறு தானிய, எண்ணெய் வித்து மதிப்பு கூட்டு இயந்திரங்கள் மானியத்தில் வழங்க ₨5 கோடி நிதி ஒதுக்கீடு

* சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மானியத்தில் வழங்க ₨10 கோடி ஒதுக்கீடு

* புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் மானியத்தில் வழங்க ₨5 கோடி நிதி ஒதுக்கீடு

* பயிர்களில் பூச்சிகள் தாக்குதலை கட்டுப்படுத்த ₨5 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு

* இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும்

* ஆதித்திராவிடர் மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீத மானியம்

* வேளாண் துறையிலும், மின்னணு வேளாண் திட்டம் ஏற்படுத்தப்படும்

* விதை முதல் விளைச்சல் வரை மின்னணு முறையில் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும்

* 19 லட்சம் ஹெக்டேரில், ரூ. 32.48 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நெல் சாகுபடி திட்டம்

* ரூ. 27 கோடியில் ஊடுபயிர் சாகுபடியை ஊக்கப்படுத்த தொகுப்பு வழங்கும் திட்டம்

* ₨28.50 கோடியில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரிக்கப்படும்

* கரும்பு டன் ஒன்றுக்கு 195 ரூபாய் ஊக்கத்தொகை

* சர்க்கரை ஆலைகளை நவீனப்படுத்த ₨3 கோடி ஒதுக்கீடு

* விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க டான்ஜெட்கோவுக்கு ₨5,157 கோடி நிதி ஒதுக்கீடு

* மதிப்பு கூட்டல் மற்றும் உணவு பதப்படுத்த 3 மிகப்பெரிய உணவு பூங்கா அமைக்க ₨381 கோடி ஒதுக்கீடு

* ₨12 கோடி மதிப்பீட்டில் விவசாயிகளுக்கு உயர் ரக மரங்கள் வழங்கி மரம் வளர்ப்பு திட்டம் ஊக்குவிக்கப்படும்

* எண்ணெய் வித்து சாகுபடியை அதிகப்படுத்த 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* பயிறு வகை விதைகளை மானியத்தில் வழங்க 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு

* வேளாண் சார்ந்த தொழில்களை தொடங்க பட்டதாரி இளைஞர்களுக்கு ₨1 லட்சம் நிதியுதவி

* நெல் அறுவடைக்குப்பின் பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்த ₨500 கோடி நிதி ஒதுக்கீடு

* விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் கருவிகள் வழங்க ₨15 கோடி ஒதுக்கீடு

* நெல்லுக்கு பதிலாக சிறுதானியம் உள்ளிட்ட மாற்று பயிர்களை சாகுபடி செய்ய ₨10 கோடி ஒதுக்கீடு

* மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ₨71 கோடி நிதி ஒதுக்கீடு

* இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ₨400 கோடி நிதி ஒதுக்கீடு

* 60,000 தமிழக விவசாயிகளுக்கு தார்பாய் வழங்க 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

* அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ₨300 கோடி நிதி ஒதுக்கீடு

* விவசாயிகளுக்கு இடுபொருள் மானியமாக ₨154 கோடி வழங்கப்பட்டுள்ளது

* விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண சிறப்பு குழு அமைப்பு

 

Trending

Exit mobile version