இந்தியா
அடுத்த 10 நாட்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி: ராகுல் காந்தி அனல் பறக்கும் பிரச்சாரம்!
![Rahul Gandhi 1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/11/Rahul-Gandhi-1-1.jpg)
சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனால் முக்கிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அதிரடி காட்டியுள்ளார்.
சத்தீஸ்கரில் நேற்று பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி அம்பிகாபுரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சி மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை ஒருபோதும் அளித்ததில்லை. கடந்த 15 ஆண்டுகளாக என்னைக் கவனித்திருந்தால் அது உங்களுக்குத் தெரியும்.
விவசாயிகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், மோடி அரசோ பணக்காரர்களுக்கு கடன் தள்ளுபடி செய்கிறது . சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் அடுத்த 10 நாட்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.