சினிமா செய்திகள்

மீண்டும் நயன்தாரா வாழ்க்கையில் குறுக்கிடும் சிம்பு!

Published

on

சிம்பு – நயன்தாரா காதல், பிரிவு எல்லாம் தமிழ் திரை உலகினர் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். கொரோனா ஊரடங்கால் திரைப்பட ஷூட்டிங் தொடங்கப்படாமல் இருந்தாலும், சிம்பு பல இயக்குநர்களுடன் கதை கேட்டு வருகிறார்.

அதில் ஒருவர் மிஷ்கின். மிஷ்கின் சொன்ன கதை சிம்புக்கு பிடித்துள்ளதால், மஃப்டி, மாநாடு, மகா படங்களைத் தொடர்ந்து சிம்பு மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள திரைப்படத்திற்கு நயன்தாராவை நாயகியாக புக் செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கோடம்பாக்க தகவல்கள் கூறுகின்றனர்.

சிம்பு, நயன்தாரா இருவரும் வல்லவன், இது நம்ம ஆளு ஆகிய திரைடங்களில் ஒன்றாக நடித்திருந்ததும், அந்த படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்று இருநதது. இந்நிலையில் இருவரும் மீண்டும் இணைவார்களா என்று ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் நயன்தாராவின் முன்னாள் காதலரான பிரபு தேவாவுடனும் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

நயன்தாரா தற்போது நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்தே, கதவுக்குள்ள ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version