இந்தியா

மீண்டும் ஊரடங்கு.. மகாராஷ்டிரா அரசு அதிரடி அறிவிப்பு.. முழு விவரம்!

Published

on

மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக கொரோனா தொற்று பரவி வருகிறது. எனவே இரவு நேர ஊரடங்கு, வார இறுதி பொது முடக்கம் என மகாராஷ்டிரா அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வார நாட்களில் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரையில் மகாராஷ்டிராவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வரையில் முழு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் அத்தியாவசிய சேவைகள், பேருந்து, ரயில், டாக்ஸி சேவைகளுக்கு முழு நேர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ள இந்த ஊரடங்கை மீறினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஊரடங்கின் போது மாநிலம் முழுவதும் மால்கள், திரை அரங்குகள், பார்கள், ரெஸ்டாரன்ட்கள், சலூன்கள், பியூட்டி பார்லர்களும் கட்டாயம் மூடப்படுவதாகவும் மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே தலைமையிலான அமைச்சரவை குழு ஞாயிற்றுக்கிழமை கூடி விவாதித்த நிலையில், இந்த ஊரடங்கு குறித்த அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version