உலகம்

போரால் வந்த வினை.. 7 வயது சிறுமி பட்டினி சாவு.. கண்கலங்க வைக்கும் புகைப்படம்..!

Published

on

பஞ்சத்தில் ஏழை நாடுகளில் பட்டினி சாவு நடப்பது இயல்பு. இப்படிக் கடந்த 4 வருடத்திற்கு முன்பு நடந்த போரில் இருந்து ஏமனால் இயல்பு நிலைக்குத் திரும்ப முடியாத நிலையில் ஒவ்வொரு நாளும் பட்டினி சாவு அதிகரித்து வருவதாகச் செய்திகள் வந்துகொண்டு இருந்தது.

தற்போது ஏமனில் பட்டினியால் எழும்பு கூடுபோல் மாறி இறந்துள்ள ஒரு சிறுமியின் புகைப்படம் வைரல் ஆகியுள்ளது.

இதனை அடுத்து ஏமனில் உள்ள 18 லட்சம் குழந்தைகளின் பரிதாப நிலை வெளியில் வந்துள்ளது. மேலும் இறந்த சிறுமியின் புகைப்படம் பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வர வைக்கிறது.

ஏமனில் உள்ள பஞ்சம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விவாதித்து வருவதாகவும் விரைவில் இந்த நிலை மாறும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version