இந்தியா
சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு அனுமதி: ஆனால் ஒரு நிபந்தனை!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் பயணிகள் விமானங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன என்பதும் குறிப்பாக இந்தியாவில் இரண்டரை ஆண்டுகளாக சர்வதேச விமானங்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது .
ஒரு சில நாடுகளுக்கு மட்டும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டாலும் பயணிகள் விமானங்கள் இயக்கப்படாடதால் பெரும்பாலான விமான பயணிகள் அவதியில் இருந்தனர்.
இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் படிபடியாக கொரோனா குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சர்வதேச பயணிகள் விமானத்தை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மார்ச் 27ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அதே நேரத்தில் விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் ஊழியர்கள் மற்றும் பைலட்டுக்கள் ஆகியோர் சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.