இந்தியா
தமிழகத்தை அடுத்து கேரளாவிலும் தியேட்டர்களை மூட உத்தரவு!
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக ஏற்கனவே தமிழகம் மற்றும் புதுவையில் திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது கேரளாவிலும் திரையரங்குகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் தற்போது புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு தியேட்டர்கள் வணிக வளாகங்கள், பார்கள் ஆகியவைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தென்னிந்தியா முழுவதும் கிட்டத்தட்ட திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதும் வட இந்தியாவிலும் பல மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பதால் புதிய படங்கள் இப்போதைக்கு வெளியாக வாய்ப்பில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரிலீசுக்கு தயாராக இருக்கும் பல திரைப்படங்கள் ஓடிடியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.