சினிமா செய்திகள்

ரெமோவுக்கு பிறகு கீர்த்திசுரேஷுக்கு மீண்டும் அடித்த ஜாக்பாட்!

Published

on

தனது உடல் எடையை குறைத்துக் கொண்டு பாலிவுட் படத்திற்காக ஆளே அடையாளம் தெரியாமல் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு மீண்டும் தனக்கு ஒரு பெரிய வெற்றி வேண்டும் என எதிர்பார்த்து தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், பாலிவுட் படத்திற்கு பிறகு தெலுங்கில் ஒரு படத்திலும் கீர்த்தி சுரேஷ் கமீட் ஆகியுள்ளார். இந்த படத்திற்கு ‘Rang De’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும், இந்த படத்தில் தான் ஒளிப்பதிவாளராக பணிபுரிவதாகவும் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் நாயகனாக நிதின் நடிக்கவுள்ளார்.

சிவகார்த்திகேயன் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ரெமோ படத்திற்கு பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்நிலையில், மீண்டுமொரு கீர்த்தி சுரேஷ் படத்திற்கு அவர் ஒளிப்பதிவு செய்வது கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாக கருதப்படுகிறது.

சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் விமானத்தில் சென்ற போது, அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. தன்னைத் தான் அனைவரும் அடையாளம் கண்டு கொண்டு செல்பி எடுத்தனர் என்றும் கீர்த்தி சுரேஷ் ஒரு நல்ல நடிகை இல்லை என்றும் ஸ்ரீரெட்டி விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு சண்டை பிடிக்காமல், கீர்த்தி சுரேஷ் தனது வழியில் கடின முயற்சி செய்து வருவது பாராட்டத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version