இந்தியா

தடுப்பூசி போட்டு கொண்ட ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு: நடிகை நக்மா அதிர்ச்சி

Published

on

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரே வாரத்தில் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நக்மா அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நடிகையும் காங்கிரஸ் கட்சியின் பிரபலமான நடிகை நக்மா கடந்த 2ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஆறே நாட்களில் அவர் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் இதனை அடுத்து தன்னைத்தானே தனிமைபடுத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் யாரும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்று அவர் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் வெளியில் செல்லும்போது பாதுகாப்புடன் செல்லுங்கள் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கும் நடிகை நக்மாவுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அவரது ரசிகர்களும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் நக்மா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version