Connect with us

சினிமா

சூர்யா படத்தோல்வி எதிரொலி; அமைதி காக்கும் இயக்குநர்!

Published

on

சூர்யா படத்தோல்வியால் பிரபல இயக்குநர் தனது அடுத்தப் படம் குறித்து இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார்.

‘மெரினா’, ‘பசங்க’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் பாண்டிராஜ். நடிகர் கார்த்தியின் சினிமா பயணத்தில் இவர் கொடுத்த ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் அதிகமான ஃபேமிலி ஆடியன்ஸை அவருக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு நடிகர் சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை இவர் இயக்கியிருந்தார். படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக தோல்வியை அடைந்தது. இது தயாரிப்பு தரப்புக்கு தோல்வியை கொடுத்துள்ள ஒரு படம் என்றும் பாண்டிராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படையாகவே ஒத்துக்கொண்டார்.

இந்த நிலையில் படம் வெளியாகி பல மாதங்கள் ஆன பின்பும் இன்னும் அவர் தனது அடுத்த படம் குறித்து அறிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். நடிகர் சூர்யாவை தொடர்ந்து மீண்டும் கார்த்தியை இயக்குவதற்கு கதை சொல்லிவிட்டு அவரது தேதிக்காக காத்திருந்தார் பாண்டிராஜ். ஆனால், நடிகர் கார்த்தி தற்போது ‘ஜப்பான்’, ‘சர்தார்2’ உள்ளிட்டப் படங்களில் பிஸியாக இருப்பதால் பாண்டிராஜுக்கு பதில் தராமல் போகவே, விஷாலை அணுகி இருக்கிறார். விஷால் சம்மதம் தெரிவித்த போதும் அவர் தற்பொழுது அடுத்தடுத்து பிரச்சினைகளில் சிக்கி வருவதால் அவர் வேண்டாம் என பாண்டிராஜ் தரப்பு ஒதுங்கி இருக்கிறது.

இதனை அடுத்து தற்போது வெளியாகியுள்ள ‘விடுதலை’ படத்தின் மூலம் நடிகர் சூரி கதையின் நாயகனாக மிகப்பெரிய கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். சூரியும் பாண்டிராஜூம் நெருக்கமானவர்கள் என்பதால் சூரியை வைத்து தற்பொழுது ஒரு படம் இயக்க முடிவு செய்து இருக்கிறார் பாண்டிராஜ். இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம். நடிகர் சூரி ‘விடுதலை’ படத்திற்கு பிறகு ‘கொட்டுக்காளி’ படத்தில் பிசியாக இருக்கிறார். இதற்கு மேல் நகைச்சுவை கதாபாத்திரங்களை குறைத்துக் கொண்டு கதையில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலேயே நடிகர் சூரி அதிகம் நடிப்பார் எனத் தெரிகிறது.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்10 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா10 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்10 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?