தமிழ்நாடு
இன்னும் 20 வருஷம் ஸ்டாலின் தான் முதல்வர், அதன்பின் உதயநிதி தான் முதல்வர்: கே.கே.எஸ்.எஸ்.ஆர்
இன்னும் 20 வருடங்களுக்கு மு க ஸ்டாலின் தான் முதல்வர் என்றும் அதன்பின் உதயநிதி ஸ்டாலின்தான் முதல்வர் என்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் கலந்துகொண்டார். அப்போது இன்னும் இருபது ஆண்டுகளுக்கு முக ஸ்டாலின் தான் முதல்வர் என்றும் கருணாநிதிக்குப் பின் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற அதுபோல் ஸ்டாலினுக்கு பின் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க தயாராக இருப்பதாகவும் வாரிசாக இருந்தாலும் வேறு பல்வேறு சிரமங்களை தாண்டி மேலே வந்தவர்கள் என்றும் கூறியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக கேடுகெட்ட ஆட்சி நடைபெற்றதாகவும் அரசு கஜானாவை அனைவரும் சுரண்டி விட்டதாகவும் குற்றம் சாட்டிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தற்போது நல்லாட்சி நடைபெற்று வருவதாகவும் நமது முதல்வர் நல்ல முதல்வர் என்றும் கூறியுள்ளார் .
மேலும் டெல்லி அரசுக்கு பயப்படாத ஒரே மாநில அரசு நமது தமிழ்நாடு அரசு தான் என்றும் அவர் கூறியுள்ளார்.