தமிழ்நாடு
பிப்ரவரி 1ஆம் தேதி திறக்கப்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை: அதிரடி தகவல்!
பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக நான்கு நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு 19ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 22ம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் பள்ளி கல்லூரிகள் மற்றும் வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெற கூடிய பிப்ரவரி 22ஆம் தேதி ஆகிய நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் பிப்ரவரி 20-ஆம் தேதி தமிழகத்தின் ஒரு சில மையங்களில் யுபிஎஸ்சி தேர்வுகள் நடைபெற இருப்பதை யுபிஎஸ்சி தேர்வு நடைபெறும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படாது என தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் பள்ளி கல்லூரிகள் வாக்குப்பதிவு நாள் பள்ளி கல்லூரிகளில் நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மற்ற பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.