தமிழ்நாடு

சசிகாலா தொடர்ந்து இளவரசிக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி!

Published

on

சசிகாலா தொடர்ந்து அவருடன் சிறையிலிருந்த இளவரசிக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெயரில் சசிகாலா, பெங்களூருவில் உள்ள பார்ப்பன அக்ரஹார சிறையில் 2017-ம் ஆண்டு அடைக்கப்பட்டார்.

அந்த வழக்கில் தொடர்புடைய இளவரசிக்கும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இன்னும் சில நாட்களில் சசிகலா விடுதலை ஆகிவிடுவார் என்று கூறப்பட்டது.

ஆனால் திடீர் உடல நலக்குறைவால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவுக்கு, 2 தினம் முன்பு கொரோனா தொற்று உறுதியானது. அவரை தொடர்ந்து அவருடன் சிறையில் தொடர்பிலிருந்து இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

எனவே இருவரும் 7 நாட்கள் கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் அளிக்கப்பட உள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் இளவரசியும் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார் என்று தகவல்கள் கூறுகின்றன. சசிகலாவின் உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளதாகவும் ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா சிகிச்சைக்கு பிறகு இருவரும் சிறைக்குச் செல்லாமல், நேரடியாக விடுதலையாகி சென்னை திரும்ப அதிக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் பார்ப்பன அக்ரஹார சிறையில் உள்ள பிற கைதிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடைபெற்று வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version