தமிழ்நாடு

சரத்குமார், பாரதிராஜா, சீமான்: அடுத்தடுத்து சசிகலாவை சந்திப்பதன் மர்மம் என்ன?

Published

on

சசிகலாவை சற்றுமுன்னர் சரத்குமார் சந்தித்து பேசிய நிலையில் இதனை அடுத்து பாரதிராஜா மற்றும் சீமான் ஆகிய இருவரும் சசிகலாவை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா அதிமுகவுடன் இணக்கமான உறவை மேற்கொள்ள விரும்பினார். அமமுக-அதிமுக இணைப்புக்கு அவர் முயற்சி செய்ததாகவும் குறைந்தபட்சம் அதிமுக கூட்டணியில் அமமுகவை இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகவும் கூறப்பட்டது

ஆனால் அதிமுக தரப்பிலிருந்து எந்தவித பாசிட்டிவ் பதிலும் வரவில்லை. இதனை அடுத்து சசிகலா தனது அதிரடியை தொடங்கியுள்ளதாக தெரிகிறது. முதலில் அதிமுக கூட்டணியில் இருந்த சரத்குமாரை சந்தித்து பேசிய சசிகலா அதன்பின் அதிமுக ஆதரவாளரான பாரதிராஜாவை சந்தித்து பேசியுள்ளார்

இந்த நிலையில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என அறிவித்த சீமானும் சசிகலாவை சந்தித்து பேசவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் கமல்ஹாசன் உள்பட இன்னும் ஒருசில அரசியல் கட்சி தலைவர்களை அவர் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதால் சசிகலாவின் அரசியல் ஆட்டம் ஆரம்பித்து விட்டதாக கூறப்படுகிறது. அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் சசிகலா வரும் தேர்தலில் நெருக்கடி கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

seithichurul

Trending

Exit mobile version