இந்தியா

ஓய்வுக்கு பின்னர் பாஜகவில் இணைய உள்ள தோனி: முன்னாள் மத்திய அமைச்சர் தகவல்!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரருமான மகேந்திர சிங் தோனி தனது ஓய்வுக்கு பின்னர் பாஜகவில் இணைவார் என மத்திய அமைச்சர் சஞ்சை பஸ்வான் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த உலகக் கோப்பை அரையிறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை அடுத்து தோனி இந்த உலகக் கோப்பை போட்டியுடன் ஓய்வு பெற உள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது. ஆனால் இதனை கேப்டன் கோலி மறுத்துள்ளார். தோனியும் இதுகுறித்தான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்நிலையில் தோனி தனது ஓய்வுக்கு பின்னர் பாஜகவில் இணைய உள்ளதாக சமீப காலமாக ஒரு தகவல் உலா வருகிறது. இந்த சூழ்நிலையில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சஞ்சை பஸ்வான், தோனி பாஜகவில் இணைவார். இதைப் பற்றி இவர் நெடு நாட்களாகவே பேசிவருகிறார். இது பற்றிய பேச்சு நீண்ட காலமாக தொடர்கிறது என்றாலும் முடிவு தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதை அறிவித்த பிறகுதான் தெரியும் என்கிறார்.

தோனி உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர், அவர் பாஜக உடன் இணைந்து செயல்படுவது பற்றி முயற்சி எடுக்கிறார் எனவும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் பாஜக மூத்த தலைவர் அமித் ஷா நாடாளுமன்ற தேர்தலுக்காக தோனியை சந்தித்து ஆதரவு கோரியது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version