உலகம்

ஒமிக்ரானை அடுத்து டெல்மிக்ரான் வைரஸ் கண்டுபிடிப்பு: அமெரிக்காவில் பரவுவதாக தகவல்!

Published

on

உலகம் முழுவதும் தற்போது மிக வேகமாகவும் ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் தற்போது திடீரென டெல்மிக்ரான் என்ற புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது என்பதும் கோடிக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்பட்டனர் என்பதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வந்ததால் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் தோன்றியதை அடுத்து உலகம் முழுவதும் மீண்டும் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியா உள்பட 90 நாட்களுக்கு மேல் ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகளின் சுகாதார துறை தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலும் டெல்மிக்ரான் என்ற புதிய வகை வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தற்போது பரவி வருவதாகவும் இந்த வைரஸ் டெல்டா கொரோனா மற்றும் ஒமிக்ரான் ஆகிய வைரஸ்களின் கலவையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு மனித இனத்தை பாதிக்கும் என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் ஆய்வுக்குப் பின்னரே இதன் பாதிப்பு குறித்து தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

ஒமிக்ரான் மற்றும் டெல்மிக்ரான் பாதிப்பிலிருந்து பொதுமக்கள் தப்பிக்க பூஸ்டர் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version