தமிழ்நாடு
மெட்ரோ ரயிலை அடுத்து மின்சார ரயில்களின் நேரமும் மாற்றமா?
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்று முதல் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மெட்ரோ ரயிலின் நேரம் மாற்றப்பட்டது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் தற்போது மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பயணிகள் சேவை இருக்காது என்று ஊரடங்கு விதியின் காரணமாக மின்சார ரயிலும் நேரம் மாற்றம் செய்ய வாய்ப்பு இருப்பதாக ரயில்வே துறையிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
சென்னையில் மின்சார ரயில்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பயணிகள் சேவை இருக்காது எனவும் ஆனால் அதே நேரத்தில் ரயில்வே ஊழியர்கள், முன்கள பணியாளர்களுக்கு மட்டும் சில சிறப்பு ரயில்களை இயக்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் எந்தவித மாற்றமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.