தமிழ்நாடு

பாஜக அலுவலகத்தில் சுந்தர் சி: குஷ்புவை அடுத்து பாஜகவில் இணைகிறரா?

Published

on

திமுகவில் இருந்து விலகி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தார் என்பது தெரிந்ததே. அவர் தற்போது திருவல்லிக்கேணி தொகுதியின் சிறப்பு தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என்பதும் அனேகமாக அந்த தொகுதியில் அவர் பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து திருவல்லிகேணியில் உள்ள ஒவ்வொரு தெருவிலும் அவர் தீவிரமாக சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக உதயநிதி போட்டியிட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குஷ்புவின் கணவர் சுந்தர் சி திடீரென இன்று பாஜக அலுவலகம் சென்று தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அவர்களை சந்தித்து பேசினார்.

குஷ்புவை அடுத்து சுந்தர் சி அவர்களும் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்ததாகவும் இதனை அடுத்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரும்போது அவர்களது முன்னிலையில் சுந்தர் சி தன்னை பாஜகவில் இணைத்து கொள்வார் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending

Exit mobile version