உலகம்
டாலருக்கு எதிராக களமிறங்கிய இந்தியா ரஷ்யா, யூ.கே.. அதிர்ச்சியில் அமெரிக்கா!
நியூயார்க்: அமெரிக்க டாலருக்கு எதிராக சர்வதேச வர்த்தகத்தில் தங்கள் நாட்டு பணத்தையே பயன்படுத்த ரஷ்யாவும், பிரிடிஷும் முடிவெடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது.
நேற்று துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் நிறுவன அதிபருடன் பிரதமர் மோடி வருடாந்திர சந்திப்பை நடத்தினார். அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் எல்லாம் இந்தியாவிடம் கச்சா எண்ணெய் விற்கும் போது, டாலருக்கு பதிலாக இந்தியா ரூபாய் வழியாகத்தான் வியாபாரம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
உலகில் எண்ணெய் வள நாடுகளுக்கு மிக முக்கியமான கஸ்டமராக இந்தியா இருப்பதால் இந்த கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.அதை தொடர்ந்து தற்போது பிரிட்டிஷ் நாடும், அவசியம் ஏற்படும் என்றால், அமெரிக்க டாலரை உலக வர்த்தகத்தில் பயன்படுத்த மாட்டோம் என்று முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில்தான் பிக்பாஸ் அமெரிக்காவிற்கு எதிராக சின்னையா ரஷ்யாவும் களமிறங்கி உள்ளது. தங்களது நாட்டு பணமான ரூபலை, டாலருக்கு பதிலாக சர்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்த இருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
இந்த மூன்று நாடுகளின் முடிவு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. இது அமெரிக்காவிற்கு பெரிய அடியாக இருக்க வாய்ப்புள்ளது.