இந்தியா
ஹிஜாப், காவியை அடுத்து நீலம்: தலித் இளைஞர்களின் கோஷம்!
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வரும் பெண்களுக்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தற்போது தான் அந்த மாணவிகள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு என தனி வகுப்பு அறை ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படாத விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திடீரென ஹிந்து மாணவ மாணவிகள் காவி உடையுடன் வந்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி உண்டு என்றால் எங்களையும் அனுமதி மத அடையாளத்துடன் அமைக்க வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர்.
இந்த நிலையில் ஹிஜாப் மற்றும் காவியை அடுத்து தற்போது நீல கலர் உடை அணிந்து தலித் மாணவர்கள் கோஷமிட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்பேத்கார் வாழ்க என்றும் ஜெய்பீம் வாழ்க என்றும் தலித் மாணவர்கள் கோஷமிட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
படிக்கும் வயதில் மதம் என்ற நஞ்சை சுயநலத்திற்காக மாணவர்களின் மனதில் அரசியல்வாதிகள் விதைத்து வருகின்றனர் என சமூக நல விரும்பிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
After #Hijab and #SaffronShawls
Now Dalits join with #BlueShawls in Karnataka supporting Hijab.Sums Ruining the whole generation for their cheap politics. ???? pic.twitter.com/pZWC6ULlFS
— Actual India (@ActualIndia) February 7, 2022