இந்தியா

ஹிஜாப்பை அடுத்து பைபிள் பிரச்சனை: கர்நாடகாவில் பரபரப்பு!

Published

on

கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கடந்த சில நாட்களாக ஹிஜாப் பிரச்சினை இருந்து வந்த நிலையில் தற்போது புதிதாக பைபிள் பிரச்சனை எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் பைபிள் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது

ஹிஜாப் பிரச்சினை தற்போது தான் கர்நாடக மாநிலத்தில் ஓய்ந்துள்ள நிலையில் தற்போது திடீரென பைபிள் பிரச்சனை தோன்றி உள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மாணவர்கள் அனைவரும் பைபிள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பள்ளியின் உத்தரவுக்கு வலதுசாரி மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த கர்நாடக கல்வித்துறை அமைச்சர் நேரடியாக அந்த பள்ளிக்கு செல்ல திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் இதுகுறித்து விளக்கம் அளித்தபோது ’மாணவர்கள் பைபிள் வைத்துக் கொள்ள வேண்டும் என நாங்கள் கூறியது உண்மைதான் என்றும், ஆனால் அதே நேரத்தில் பெற்றோர்களின் அனுமதி பெற்றே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும், நாங்கள் அமைதியையும் சட்டத்தை மதித்து நடப்பவர்கள் விரும்புகிறோம் என்றும் கூறியுள்ளனர்

 

Trending

Exit mobile version