தமிழ்நாடு
தேர்தல் முடிந்ததும் மீண்டும் ஊரடங்கா? ஆலோசனையில் தமிழக அரசு!
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக அதிகமாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் தேர்தலுக்கு பின்னர் தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு 2000ஐ தாண்டி உள்ளது என்பதும் குறிப்பாக சென்னை, கோவை, திருவள்ளூர், தஞ்சை, செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களில் மிக அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது என்பதும் ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தேர்தல் முடிந்த பின்னர் இரவு நேர ஊரடங்கு, தனியார்துறை ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியமர்த்துதல் உள்பட ஒரு சில கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.