சினிமா செய்திகள்

நேற்று டுவிட்டரில் தனுஷ், இன்று இன்ஸ்டாகிராமில் ராஷ்மிகா மந்தனா!

Published

on

தமிழ் திரையுலக பிரபல நடிகர் தனுஷ் நேற்று டுவிட்டரில் ஒரு கோடி ஃபாலோயர்களை பெற்றார் என்பதும் தென்னிந்திய திரை உலகில் உள்ள நடிகர்களில் முதல் முதலாக அவர்தான் ஒரு கோடி ஃபாலோயர்களை பெற்ற நடிகர் என்ற பெருமை கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று டுவிட்டரில் தனுஷ் சாதனை செய்த நிலையில் இன்று நடிகை ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராமில் சாதனை செய்துள்ளார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் 1.9 கோடி ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் இதனை அடுத்து ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய திரை உலகில் மிக அதிக ஃபாலோயர்களை பெற்ற நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் வெளியான கார்த்தியின் ’சுல்தான்’ என்ற தமிழ் படத்தில் நடித்தார் என்பதும் இதனை அடுத்து வேறு சில தமிழ் படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே விஜய்யின் ஒவ்வொரு படத்திற்கும் அவர்தான் நாயகியாக பேசப்படுவார் என்பதும் அதன் பின்னர் நடிகைகள் மாறிவருவது கடந்த சில வருடங்களாக நடந்து வருகிறது என்பதும் இருப்பினும் விஜய்யுடன் விரைவில் நடிப்பேன் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் 1.9 கோடி ஃபாலோயர்களை பெற்றுள்ள ராஷ்மிகா மந்தனாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Trending

Exit mobile version