கிரிக்கெட்
சிஎஸ்கேவை அடுத்து பிளே ஆஃப் சுற்றுக்கு சென்ற இன்னொரு அணி!
நேற்றைய ஐபிஎல் 45வது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிய நிலையில் பஞ்சாப் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது. இதனை அடுத்து பஞ்சாப் வெற்றியால் சென்னையை அடுத்து மேலும் ஒரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரரான வெங்கடேச ஐயர் மிக அபாரமாக விளையாடி 67 ரன்கள் அடித்தார்.
இந்தநிலையில் 166 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி கேப்டன் ராகுலின் பொறுப்பான ஆட்டம் காரணமாக 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய வெற்றியால் பஞ்சாப் அணி 10 புள்ளிகளுடன் தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா தோல்வி அடைந்ததன் காரணமாக அதே நான்காவது இடத்திலேயே நீடித்து வருகிறது.
இந்த நிலையில் நேற்றைய பஞ்சாபின் வெற்றி காரணமாக டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. டெல்லி அணி தற்போது 16 புள்ளிகளைப் பெற்றுள்ள நிலையில் பெங்களூர் தவிர வேறு எந்த அணியும் 16 புள்ளிகளை எடுக்க இனி வாய்ப்பில்லை என்பதால் டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 3-வது மற்றும் 4-வது இடத்திற்காக பெங்களூரு, கொல்கத்தா, பஞ்சாப், மும்பை, ராஜஸ்தான் ஆகிய 5 அணிகள் போட்டி போட்டு வருகின்றன என்பதும், இறுதியில் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் நான்கு அணிகள் எவை என்பதை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.