Connect with us

இந்தியா

அம்பானியை அடுத்து ஊடகத்துறையில் கால்பதிக்கும் அதானி!

Published

on

அம்பானி குழுமத்தை அடுத்து தற்போது அதானி குழுமம் ஊடகத்துறையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளதால் ஊடகத்துறை மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அம்பானி குழுமம் நெட்வொர்க் 18 என்ற செய்தி ஊடகத்தை வாங்கியது என்பதும் தற்போது அது தமிழ் உள்பட பல மொழிகளில் செய்து ஊடகமாகவும், தொலைக்காட்சி ஊடகமாகவும் இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அம்பானியை அடுத்தது அதானியும் ஊடகத் துறையில் கால்பதித்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. குஜராத் மாநிலத்தை சேர்ந்த அதானி குழுமம் பல்வேறு துறைகளில் குறிப்பாக தொழில்நுட்பம், தூய்மை, பசுமைப் பொருளாதாரம், எரிசக்தி, துறைமுகம், வேளாண் பாதுகாப்பு, விண்வெளி உள்பட பல துறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அடுத்த கட்டமாக அதானி குழுமம் ஊடகத்துறையில் கால் வைக்க உள்ளதாகவும் முதல் கட்டமாக தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உலகத்தில் கால்வைக்கும் அதானி குழுமம், அதன்பிறகு அச்சு ஊடகத்திலும் கால்பதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், ‘அரசியல், நிதி மற்றும் வணிகம் ஆகிய துறைகளில் அனுபவம் வாய்ந்த மூத்த பத்திரிகையாளர் சஞ்சய் புகாலியா அவர்கள் தங்களது ஊடக நிறுவனத்திற்கு தலைமை பொறுப்பு ஏற்பார் என்றும் அவர் CNBC உள்பட பல ஊடகங்களில் பணிபுரிந்து அனுபவம் பெற்றவர் என்றும் அவர் தங்களது உலகத்தையும் பிரபலமாக்குவார் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

பிசினஸ் ஸ்டாண்டர்டு உள்பட பல பத்திரிகைகளில் பணியாற்றி, பிபிசி வானொலி நிலையத்திலும் பணியாற்றிய அனுபவமுள்ள சஞ்சய் புகாலியா அவர்கள் அதானி குழுமத்தின் ஊடகத்தையும் இந்தியாவின் நம்பர் ஒன் ஊடகமாக கொண்டுவர தீவிர முயற்சி செய்வார் என்று கூறப்படுகிறது.

அரசியல், சினிமா, பொது செய்திகள், வணிகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு செய்திகளை பொது மக்களுக்கு உடனுக்குடன் திட்டமிட்டுள்ள அதானி குழுமத்தின் அதிகாரபூர்வ ஊடக பெயர் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

author avatar
seithichurul
ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா10 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு10 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்10 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்10 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

அம்பானி குடும்பத்தினர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?