உலகம்

வாலிபால் வீராங்கனையின் தலையை கொய்து கொலை செய்த தாலிபான்கள்: அதிர்ச்சி தகவல்!

Published

on

ஆப்கானிஸ்தான் நாட்டில் இளம் வாலிபால் வீராங்கனை ஒருவரின் தலையை கொய்து தாலிபான்கள் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் என்பதும் தற்போது அவர்களுடைய ஆட்சிதான் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தாலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு சுதந்திரம் பறி போய் விட்டதாகவும் குறிப்பாக விளையாட்டு வீராங்கனைகள் யாருக்கும் அனுமதி இல்லை என்றும் தாலிபான்கள் கூறியதை அடுத்து விளையாட்டு வீராங்கனைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பெண்கள் யாரும் வாலிபால் விளையாட கூடாது என கட்டுப்பாடு விதித்தனர். இந்த நிலையில் தடையை மீறி தேசிய வாலிபால் ஜூனியர் அணியில் இளம் வீராங்கனை ஒருவர் விளையாடி வந்த நிலையில் அந்த வீராங்கனையின் தலையை துண்டாக வெட்டி கொலை செய்த தாலிபான்களின் வெறிச்செயல் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதுகுறித்த செய்தி சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வாலிபால் அணியின் பயிற்சியாளர் ஒருவர் அந்த வீராங்கனையை கடத்த உதவியதாகவும் அதன்பின்னரே தாலிபான்கள் அவருடைய கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் தகவல் கசிந்துள்ளது.

தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஆட்சியைப் பிடித்தபோது விளையாட்டு வீராங்கனைகள் பலர் அந்நாட்டில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கொலை செய்யப்பட்ட வாலிபால் வீராங்கனைக்கு அந்நாட்டில் இருந்து தப்பித்து செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அவர் நாட்டை விட்டு வெளியேற முயற்சி கொண்டிருந்தபோது திடீரென தற்போது தலை துண்டித்து கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் அவரின் கொலைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன

seithichurul

Trending

Exit mobile version