தமிழ்நாடு

ஒரே நாடு ஒரே தேர்தல்: அனுமதி அளிக்காவிட்டாலும் அதிமுக ஆதரவு!

Published

on

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொள்கிறோம் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக நேற்று முன்தினம் டெல்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அதிமுக சார்பில் சென்றிருந்த அமைச்சர் சி.வி.சண்முகம் அனுமதிக்கப்படவில்லை. இதனால் தங்கள் கருத்துக்களை கடிதம் மூலமாக தெரிவித்துள்ளது அதிமுக.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகம், ஒரே நாடு ஒரே தேர்தல் முறையைக் கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொள்கிறோம். ஜெயலலிதா இருந்தபோதே, ஒரே நாடு ஒரே தேர்தல் முறை மூலம் ஏற்படும் நடைமுறை சிக்கல் குறித்து சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

தற்போது அதே கருத்தைக் குறிப்பிட்டு நடைமுறை சிக்கல் உள்ளதை எழுத்துபூர்வமாக மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம். மேலும், ஏழு பேர் விடுதலை குறித்தான அரசு தரப்பு கருத்துகளை நீதிமன்றத்தில் கூறுவோம் என்றார் சி.வி.சண்முகம்.

Trending

Exit mobile version