தமிழ்நாடு

ஸ்டாலின், உதயநிதி தொகுதிகள் உட்பட 5 தொகுதிகளில் தேர்தல் நிறுத்தமா?

Published

on

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற இருக்கும் நிலையில் வாக்குபதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் உள்ளிட்ட 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக் கோரி தேர்தல் ஆணையத்திடம் அதிமுக தரப்பு மனு கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கொளத்தூர், திருச்சி மேற்கு, சேப்பாக்கம், திருவண்ணாமலை, காட்பாடி ஆகிய ஐந்து தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையத்தின் சற்றுமுன் அதிமுக மனு அளித்துள்ளது. இந்த மனு மீது தேர்தல் ஆணையம் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

மேற்கண்ட ஐந்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் முறைகேடு செய்துள்ளதாகவும், திமுக தரப்பில் இருந்து அதிநவீன தொழில்நுட்ப முறையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்த தேர்தலை நிறுத்த வேண்டும் என்று அதிமுக தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version