Connect with us

தமிழ்நாடு

தினகரனை பிரச்சாரம் செய்ய அனுமதிக்க கூடாது: தேர்தல் ஆணையத்தை நாடிய அதிமுக!

Published

on

அமமுக பொதுச்செயலாளரான டிடிவி தினகரனின் பிரச்சாரத்துக்கு தடை விதிக்க வேண்டுமெனவும், அவருக்கு முன்னர் கொடுக்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது அதிமுக.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அமமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் தினகரன் அதிமுகவையும், முதல்வர், துணை முதல்வர் ஆகியோரையும் மிகவும் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார். முன்பெல்லாம் இல்லாத அளவுக்கு உள்ளது அவரது தற்போதையை பிரச்சாரம். அந்த அளவுக்கு காட்டமாக உள்ளது.

இந்நிலையில் உண்மைக்கு மாறாக அவதூறு தகவல்களை தினகரன் பரப்புவதாகவும், அவரது பிரச்சாரத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக நேற்று மனு அளித்துள்ளது. அதிமுக செய்தித் தொடர்பாளர் பாபு முருகவேல் இந்த புகாரை அளித்துள்ளார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பாபு முருகவேல், காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கும், எட்டுவழிச் சாலை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கும் உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் தினகரன் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகிறார். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது.

நேற்று முன்தினம் சூலூரில் பிரச்சாரத்தின்போது மருத்துவ அவசர ஊர்திக்கு வழிவிடாமல் பிரச்சாரம் செய்துள்ளார். எனவே பிரதான சாலைகளில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு தினகரனுக்கு தடை விதிக்க வேண்டும். முன்பு கொடுக்கப்பட்ட அனுமதியையும் ரத்து செய்ய வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளோம். மேலும் பொய்யான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பும் தினகரன் தொடர்ந்து விதிமீறி செயல்பட்டுக்கொண்டிருப்பதால், அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.

author avatar
seithichurul
Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் (ஆகஸ்ட் 17, 2024)

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா19 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு19 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்19 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்19 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

சினிமா3 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

வணிகம்5 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்4 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

ஐடி துறையில் தொடரும் பணி நீக்கம்: 1,30,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதுவரை பாதிப்பு!