தமிழ்நாடு

மனநலம் பாதிக்கப்பட்டிருக்கும் எச்.ராஜாவை தமிழகத்தில் நடமாட விடக்கூடாது: அதிமுக எம்பி அதிரடி!

Published

on

தொடர்ந்து சர்ச்சைக்குறிய வகையில் பேசி தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரை தமிழகத்தில் நடமாட விடக்கூடாது எனவும் அதிமுக எம்பி அருண்மொழிதேவன் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் குறித்தும், காவல்துறை குறித்தும் சர்ச்சைக்குறிய வகையில் பேசிய எச்.ராஜா அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இந்து சமய அறநிலையத் துறையினரையும், அவர்களது குடும்பத்தினரையும் அவதூறாகவும், இழிவாகவும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதனையடுத்து எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத் துறையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய அதிமுக எம்பி அருண்மொழிதேவன், மதக் கலவரத்தை தூண்டும் வகையில் எச்.ராஜாவின் செயல்பாடுகள் இருக்கிறது. உயர் நீதிமன்றத்தைப் பற்றி அவதூறாகப் பேசி தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அரசியல் நாகரீகம் இல்லாமல் அவரது நடவடிக்கை இருக்கிறது.

எச்.ராஜாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழகத்தில் இப்படிப்பட்ட ஒருவரை நடமாட விடக்கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை என்று தெரிவித்தார். மேலும் ஹெச்.ராஜா தொடர்ந்து அவதூறாகப் பேசி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும், அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார் அதிமுக எம்பி அருண்மொழிதேவன்.

seithichurul

Trending

Exit mobile version