இந்தியா
காஷ்மீரைப்போல் கச்சத்தீவையும் பெற்றுத்தாருங்கள்: மக்களவையில் அதிமுக வலியுறுத்தல்!
![Katchatheevu - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/08/Katchatheevu.jpg)
இந்தியாவுக்கு சொந்தமான கச்சத்தீவை இலங்கைக்கு காங்கிரஸ் அரசாங்கம் தாரைவார்த்ததை மீட்டு அதனை பெற்றுத்தாருங்கள் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் மக்களவையில் அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார்.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 பிரிவை நீக்கி இரண்டு யூனியன் பிரதேசமாக பிரிக்கும் மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஆதரவு அளித்த அதிமுக மக்களவையிலும் ஆதரவு அளித்தது. இதற்கு ஆதரவாக பேசிய அக்கட்சியின் எம்பி ரவீந்திரநாத் குமார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஜம்மூ காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் எப்போது இணைக்கப் போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு விடை கொடுத்த பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் நன்றி என கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், அரசியல் ஆதாயத்துக்காக 1974-ம் ஆண்டு காங்கிரஸ் அரசு கச்சத்தீவை தமிழகத்திலிருந்து பிரித்து இலங்கைக்கு கொடுத்தது. ஜம்மூ காஷ்மீரின் உரிமையை பறித்தது போலவே தெற்கே கச்சத்தீவை தாரைவார்த்து தமிழகத்தின் உரிமையை பறித்துவிட்டார்கள். நாங்கள் இழந்த கச்சத்தீவை மீண்டும் தமிழகத்திற்குப் பெற்றுத் தர வேண்டும் என்று உள் துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கிறேன் என்று வலியுறுத்தினார்.